Pages

Monday, June 13, 2022

இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இடிக்கப்படும் வீடு!! தொடரும் பாஜகவின் தேச விரோத செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

சுற்றறிக்கை: 55/2022 தேதி: 13/06/2022 இறைவனின் திருப்பெயரால்... இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இடிக்கப்படும் வீடு!! தொடரும் பாஜகவின் தேச விரோத செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். சமீபத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகளாரை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருந்தனர். உள்நாட்டிலும் ,உலக நாடுகளிலும் கடும் எதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டு பயந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்று பாஜக பாசாங்கு செய்து வருகிறது. அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகும் எந்த கைது நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கண்டித்து தன்னெழுச்சி மிக்க போராட்டங்கள் தேசமெங்கும் நடந்து வருகின்றன. இச்சூழ்நிலையிலும் நுபுர் சர்மாவை கைது செய்யாமல் அவர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் பாஜக. அறவழியில் போராடி வரும் அப்பாவிகள் மீது தாக்குதல்களை தொடுத்து வருகின்றது. ஜார்கண்ட் துப்பாக்கிச் சூடு: ஜார்கண்டில் நடைபெற்று வந்த அறவழிப் போராட்டத்தை சில விஷமிகள் கலந்து கொண்டு வன்முறையாக மாற்ற அதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது சிறுவன் முத்தஸ்ஸிர் அநியாயமான முறையில் சுட்டுக் கொல்லப்படுள்ளான். அதே போன்று 22 வயதே நிரம்பிய ஸஹீல் அன்சாரி என்ற இளைஞரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர்களின் குடும்பத்தார் கதறியழும் காட்சிகளைப் பார்க்கும் கண்கள் குளமாகின்றன. தன் வாய்க்கொழுப்பால் நபிகளார் பற்றிப் பேசி நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய நுபுர் ஷர்மாவிற்கு புகலிடம் வழங்கி விட்டு அறவழியில் போராடிய அப்பாவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் ஃபாசிச பாஜக:* நியாயத்திற்காக குரல் எழுப்பிப் போராடியவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதுடன் பலரை கைது செய்தும் அவர்களின் வீடுகளையும் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்கும் இரக்கமற்ற இழி செயலை பாஜக மேற்கொண்டு வருகின்றது. நம் ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் என்பவை சாதாரணமானவையே. இதை ஒடுக்க எதற்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவும் அறவழியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் தான் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் ஷாஹின் பாக் உள்ளிட்ட பல அறவழிப் போராட்டங்கள் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளன. போராடுபவர்களின் வீட்டை இடித்து விட்டால் அவர்கள் வீட்டிலேயே முடங்கிவிடுவார்கள். அவர்களின் குரல் ஓய்ந்து விடும் .என்பது தான் பாஜகவின் திட்டம். ஆனால் பாஜகவின் இத்தகைய அடக்கு முறைகளால் மக்கள் இன்னும் வீறு கொண்டு எழு வார்களே தவிர ! அவர்களின் குரல் ஓயப்போவதில்லை! வீடு இடிப்புச் செயலை நியாயப் படுத்துவதற்காக அனுமதி பெறாமல் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் இடிக்கப்பட்டுள்ளன என யோகி அரசு விஷம் கக்கியிருக்கின்றது. அனுமதி பெறாமல் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடிடங்களில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் வசிக்கின்றனரா? மற்ற சமுதாயத்தார் யாரும் அவ்வாறு இல்லையா? அவர்களின் குடியிருப்புகளை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாமியர்களின் வீடுகளை மாத்திரம் இடித்துத் தள்ளி இருப்பது பாஜகவுக்கெதிராக அவர்கள் போராடினார்கள் என்ற காரணத்திற்குத் தானே தவிர. அனுமதி இன்றி கட்டிடம் கட்டியதற்காக அல்ல. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்தகைய கொடுமையை கண்டும் இன்னும் வாய் திறக்கவில்லை. இவ்வளவு பெரிய அநியாயம் நம்நாட்டில் அரங்கேறி இருக்கிறது. நாடு தழுவிய போராட்டங்களை இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவித்து இருக்க வேண்டாமா? கள்ள மௌனம் சாதிப்பதின் மூலமாக பாஜகவின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு இவர்கள் ஒத்து ஊதுவதாகவே நமக்குத் தோன்றுகிறது. இதுவும் ஜனநாயகப் படுகொலையின் ஒரு அங்கமே. இது போன்ற அநியாயங்களை அரங்கேற்றி தொடர்படியாக இஸ்லாமிய சமூகத்தை வஞ்சித்து, தேசத்தை படுகுழியில் தள்ளி வரும் பாஜகவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. அநீதி இழைக்கப்பட்டவனின் பிராத்தனைக்கு பயந்து கொள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புஹாரி 1496. இப்படிக்கு: ஆர். அப்துல்கரீம். பொதுச் செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment